வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Tuesday 31 January 2012

சமூக சேவையில் மஜ்லிசுல் உலமா சபை




Sunday 29 January 2012

வளர்ச்சிப்பணிகள்

பள்ளிவாசலின் முகப்பில் இருந்த டாய்லட் இடித்து அப்பறப்படுத்தப்பட்டு
தளம் போடும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்சி.




Monday 16 January 2012

பரப்பப்பட்ட புருடாக்களும், மறைக்கப்பட்ட வரலாறுகளும்.

நமது தலைநகர் டெல்லி, புது டெல்லி, மற்றும் பழைய டெல்லி என்று அழைக்கப்படுகிறது. பழைய டெல்லி என்றழைக்கப்படும் புரதான சின்னங்கலடங்கிய, அதாவது செங்கோட்டை, குதுப்மினார், ஜாமா மசூதி போன்ற வரலாற்று புகழ்பெற்ற கட்டிடங்கள் அடங்கிய பழைய டெல்லியில் பெரும்பாலும் வசிக்கும் இஸ்லாமியர்கள் வறுமைக்கோட்டிற்கு மிகவும் கீழே இருப்பவர்களை காணப்படுகிறார்கள். அவர்களிடம் இஸ்லாமிய பெயர்கள் மட்டுமே இருக்கின்றது.. மற்றபடி அவர்களது பழக்க வழக்கங்கள் போதைக்கு அடிமைப்பட்டவர்களாய் காணப்பப்டுகிரார்கள். ஜாமா மசூதி, செங்கோட்டை போன்ற சுற்றியுள்ள பகுதிகளை வசிக்கும் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்கள், ரிக்ஷா, ஆட்டோ, ஓட்டும் தொழிலாளர்களாகவும், சுமைதூக்கும் தொழிலாளர்களாகவுமே இருக்கிறார்கள்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிற்கு வருகை தந்த - கவனிக்கவும், வருகைதந்த முகலாயர்கள் - இந்தியர்களின் விருப்பத்திற்கிணங்க தான் ஆட்சி புரிந்தார்கள். அதாவது கி.பி. 1526 நடைபெற்ற முதல் பானிபட் போர் எனபது, அப்போது டெல்லியை ஆண்ட மன்னன் இப்ராஹீம் லோடி என்பவனுக்கும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பாபர் என்பவருக்கும் நடந்தது. இந்த போரில் தான் முதன்முறையாக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன எனபது வரலாறு.

அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹீம் லோடி என்பவரின் ஆட்சியை விரும்பாத மக்கள் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மன்னர் பாபரை அழைத்தனர். இதைதான் வரலாற்று புரட்டர்கள் முகலாய படையெடுப்பு என்ற நச்சுகருத்தை நமக்கு சிறுவயதிலேயே திணிக்கின்றனர்.அது படைஎடுப்பல்ல, அப்போதைய மக்களின் விருப்பம். அதனால்தான் பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய கடிதத்தில் கூட, பசுவை தெய்வமாக வணங்கும் மக்கள் நிறைந்த நாடு இது, எனவே பசுவை இறைச்சிக்காக அறுக்கவேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.படையெடுத்துவந்த மன்னன் அந்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவானா, தன்னிஷ்ட்டப்படி ஆட்சி செய்வானா?

அதன்படி, பாபர், ஷெர்ஷா, ஹுமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் என்று வரிசயாக இஸ்லாமிய மன்னர்கள் தொடர்ந்து - சொந்த விசயங்களில் அவர்கள் தவறானவர்களாக இருந்திருக்கலாம்..ஆனால் ஆட்சி என்று வரும்போது, அன்றைய மக்கள் விரும்பிய- நல்லாட்சிகளேயே வழங்கி வந்தனர். அது மட்டுமல்ல, பல்வேறு குட்டி குட்டி ராஜ்யங்கலாகவும், சமஸ்தானங்களாகவும், தமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டு பல்வேறு பிரதேசங்களாக இருந்த இந்த நாட்டை, இந்தியா என்ற ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைத்தது முகலாயர்களின் சாதனை.
அவுரங்கசீப் வரை அனைத்து மக்களின் நலனை கொண்டே எல்லாரும் ஆட்சி செய்த காரணத்தினால்தான், அவுரங்கசீப்பினால் தனது ராஜ்யத்தை தென்னிந்தியாவரை விஸ்தரிக்க முடிந்தது. அவர் ஒரு பரிபூரண இஸ்லாமியராக - கொள்கையுடன் வாழந்த காரணத்தினாலேயே இந்த வரலாற்று புரட்டர்களால், முகலாய மன்னர்களிலேயே மோசமானவராக சித்தரிக்கபடுகிறார்.அவர் இருக்கும்வரை கட்டுக்கோப்பாக இருந்த முகலாய சாம்ராஜ்யம், அவுரங்கசீப்பிற்கு பின்னர்தான் சீரழிந்தது. இறுதியில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட கொல்லப்பட்ட முகலாய கடைசி சக்கரவர்த்தி "ஷா" மன்னரின் ராஜ்ஜியம் அவரது அரண்மைக்குள்ளே மட்டும்தான் என்றால் பார்த்துக்கொள்ளவேண்டியது.
ஆனால் இன்று முகலாய மன்னர்களின் வாரிசுகள் யார், எங்கிருக்கிறார்கள் என்ற எந்த ஒரு சான்றும் எனக்கு தெரிந்து இல்லை என்றே நினைக்கிறேன்..(அப்படி இருந்தால் யாராவது தெரிவியுங்களேன்..பிளீஸ் )
முன்னூறு ஆண்டுகளுக்கும் இந்தியாவை ஆண்ட இந்த மன்னர்களின் வாரிசுகள் எங்கே சென்றார்கள்? அவர்களின் வாரிசுகதான் பழைய டெல்லியில் வசிக்கும் சாலையோர வாசிகளோ.? அதனால்தான் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு அடித்தட்டு மக்களைவிட மோசமான நிலையில் இருகிறார்களோ?

ஆனால்...
நாற்பதினாயிரம் மனைவிகளை மணந்து, ஒரு முனிவர் கொடுத்த ஏதோ ஒரு கனியின் மூலம் நான்கு மகன்களை பெற்ற தசரதன்...

நூறு பேர் கொண்ட படையை வென்ற ஐந்து பேர்கொண்ட பஞ்ச பாண்டவர்கள் -

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் வைத்திருந்த மணிமேகலை

சாவே வராத நெல்லிக்கனியை தின்ற அவ்வையார்

தனது கன்றை கொன்ற மன்னனின் மகனை கம்ப்ளைன்ட் செய்த பசு மாட்டிற்காக (?) மகனை தேர் எற்றிகொன்ற மனுநீதி சோழன்

ஒரு குச்சியை வைத்தால் நின்று விடும் முல்லைக்கு விலை மதிப்புள்ள தேரை கொடுத்த பாரி

மயிலுக்கு குளிர் எடுக்கும் என்று போர்வை வழங்கிய பேகன்

கணவனுக்கு தண்டனை வழங்கியதற்காக மதுரையையே எரித்த கண்ணகி.

போன்ற புனைக்கதைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இங்கே - நம் நாட்டை பல நூறு வருடங்கள் ஆண்ட முகலாய சரித்திரத்திற்கு கொடுக்கப்படாமல் இருப்பது வரலாற்று மோசடி என்பதைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்?

நன்றி:http://adiraixpress.blogspot.com/2011/11/2_30.html

Friday 13 January 2012

நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

மல்லிபட்டினம் கடைத்தெருவில் நாளை மாலை SDPI சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கிளை தலைவர் ஜெய்லானி அவர்கள் தெரிவித்தார்.

Wednesday 11 January 2012

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்

 
1) தொழுகையில் இமாமை முந்துதல் : 
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் "ஆமீன்" என்று சொல்லுங்கள்". மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?" என்றார்கள்.
2) கொலை செய்தல் :
"எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்" (அல்-குர்ஆன் 4:93)
‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)
3) விபச்சாரம் செய்தல் : 
"நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது" (அல்-குர்ஆன் 17:32)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை." (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்) 
4) ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல் :
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை" (அல்-குர்ஆன் 29:28-29)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாம்: அஹ்மத்)
5) வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல் :
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் – முதல் – உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்" (அல்-குர்ஆன் 2:278-2:279)
"வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்" (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
6) மது அருந்துதல் :
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள்: அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா)
7) சூதாட்டத்தில் ஈடுபடுதல் :
"(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது." (அல்குர்ஆன் 2: 219)
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)
8) பொய் பேசுதல் :
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)
9) திருடுதல் :
"திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்" (அல்-குர்ஆன் 5:38)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ஒரு முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும்’ (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)
10) லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல் :
"அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்" (அல்-குர்ஆன் 2:188)
‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: இப்னுமாஜா).
11) பொய்சாட்சி கூறுதல் :
அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)
12) அவதூறு கூறுதல் :
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)
13) அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல் :
"நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)
‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.
14) கர்வம் கொள்ளுதல் :
"நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை" (அல்-குர்ஆன் 4:36)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்." (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)
15) தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல் :
‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்." (ஆதாரம்: அல் அதபுல் முஃப்ரத்)
16) அளவு நிறுவையில் மோசடி செய்தல் : 
"அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)
"மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்" (அல்-குர்ஆன் 55:7-9)
17) பிறர் சொத்தை அபகரித்தல் : 
அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள் : "எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்" என்று கூறினார்கள்.
18) மோசடி செய்தல் : 
"எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்" (அல்-குர்ஆன் 3:161)
"நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (அல்-குர்ஆன் 8:58)
19) அநீதி இழைத்தல் : 
"அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரளியல்லாஹு அன்ஹு யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)
20) புறம் பேசுதல் : 
முஃமின்களே! (சந்தகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)