வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Monday 30 April 2012

வேண்டுகோள்

மல்லிபட்டினம் கந்தூரி விழாவின் போட்டோ அல்லது வீடியோ போடுவதற்கு உங்களுக்கு ஆட்சேபம் ஏதும் உள்ளதா?

உங்கள் மேலான கருத்துக்களை எழுதவும்.

26 comments:

தயவு செய்து வேண்டாம்.

அவற்றை போடுவதனால் அதை பார்ப்பவர்களுக்கு அவர்ளின் முட்டாள்தனம் தெரிய வேண்டும்.அப்படி இல்லாமல் அதை ஆதரிக்கும் வகையில் உள்ள வீடியவையோ போட்டோவையோ போடுவது தவறுதான்


நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீரகள்!அல்லாவை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.

அல் குர்ஆன் 5:2


அப்லோட் செய்யும் வீடியோ கந்தூரியை வளர்ப்பதாக இருக்ககூடாது

18 minutes ago
Adirai Maji

அவற்றை போடுவதனால் அதை பார்ப்பவர்களுக்கு அவர்ளின் முட்டாள்தனம் தெரிய வேண்டும்.அப்படி இல்லாமல் அதை ஆதரிக்கும் வகையில் உள்ள வீடியவையோ போட்டோவையோ போடுவது தவறுதான்


நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீரகள்!அல்லாவை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.

அல் குர்ஆன் 5:2


அப்லோட் செய்யும் வீடியோ கந்தூரியை வளர்ப்பதாக இருக்ககூடாது

This comment has been removed by the author.

போடலாம்... போடக்கூடாது என்று சொல்பவர்கள் சொல்லும் காரணம் என்ன என்று தெரியவில்லை.

அதை தடுத்தால் வீட்டுக்கு வீடு இருக்கும் டிவி யை நொறுக்க வேண்டும். யாரும் பார்க்ககூடாது. அதில் வருவதை விடவா ஆபாசம்!

அடுத்த ஊரில் இருக்கும் தர்காக்களுக்கு சென்று இரவு தங்கி பிரார்த்திப்பதை தடுக்க வேண்டும்.

வேன் பிடித்து கோவில்களுக்கு சென்று ஆடு பலியிட்டு குடும்பத்தோடு சாமிக்கு காணிக்கை செய்வதை தடுக்க வேண்டும்.

பஸ் பிடித்து தியேட்டர் சென்று படம் பார்ப்பதை தடுக்க வேண்டும்.

சீர்திருத்தம் எல்லாவற்றிலும் செய்பவனே சீர்திருத்தவாதி.

This comment has been removed by the author.

//////அதை தடுத்தால் வீட்டுக்கு வீடு இருக்கும் டிவி யை நொறுக்க வேண்டும். யாரும் பார்க்ககூடாது. அதில் வருவதை விடவா ஆபாசம்!
////////

HA HA அவர்களே டிவியில் வரும் நிகழ்ச்சிகளில் ஆபாசமானவையாகவே உள்ளன.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் அதே டிவியை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காகவும் பயன்படுத்தலாம்.

மேலும் ///போடக்கூடாது என்று சொல்பவர்கள் சொல்லும் காரணம் என்ன என்று தெரியவில்லை.////

காரணம் தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள்.அதற்கான காரணத்தை MMWA Brother சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

////சீர்திருத்தம் எல்லாவற்றிலும் செய்பவனே சீர்திருத்தவாதி.///
இதை ஏற்றுக்கொள்கிறேன்.

////தர்காக்களுக்கு செல்பவர்களை தடுப்பது,கோவிலுக்கு சென்று காணிக்கை செய்பவர்களை தடுப்பது,தியேட்டர் செல்பவர்களை தடுப்பது///////
எல்லாமே சீர்திருத்தவாதிகள் செய்ய வேண்டியவைதான்.

ஆனால் இவற்றை செய்ய முடியவில்லை என்றால் கந்தூரி வீடியோ போடுவதை சரிகாணலாமா?

இந்த பதிவில் கேட்டப்பட்டதற்க்கு பதில்.தங்கள் கருத்து என்ன?

(இதை நான் சகோதரர் MMWA Brothers அவர்களின் நிலைபாட்டிலிருந்து கேட்கிறேன் :::::அப்லோட் செய்யும் வீடியோ கந்தூரியை வளர்ப்பதாக இருக்ககூடாது::::::)

7:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

3:132. அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.

4:13. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.

4:14. எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

4:69. யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.

6:153. நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.

17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.

17:89. நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.

24:51. முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.

24:52. இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.

33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

அப்படி ஒரு விஷயம் நடப்பதை தடுக்க முடியவில்லையாம்.

அதை நடத்தும் ஜமா அத்தில் உறுப்பினராகவும் பொருளாளராகவும் இருக்கும் இந்த தளத்தை நடத்துபவர் சகோதரர் நிஜாம் தன எதிர்ப்பை தெரிவித்து ராஜினாமா செய்யவில்லையாம். அதை ஏன் என்று கேட்க தைரியம் இல்லையாம்.

ஊரில் உள்ள எல்லோரும் அதை சென்று பார்ப்பதை தடுக்க முடியாதவர்கள், வெளியூர்களிலும் வெளிநாட்டுகளிலும் வாழும் சகோதரர்கள் அதை பார்ப்பதை தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

வேண்டும் வேண்டும் வீடியோ வேண்டும்.

தொலைக்காட்சியை நன்மைக்கும் பயன்படுத்தாலாம். ஆனால் அதற்காகவா எல்லார் வீட்டிலும் டிவி இருக்கிறது.

பத்து சதவிகித நன்மையான விஷயங்கள் பார்ப்பதற்காக, தொண்ணூறு சதவிகித தீமையான ஆபாசமான விஷயங்களை காட்டும் டிவி யை ஆதரிக்கும் நீங்கள், அதை சரிகாணும் நீங்கள், சிறு குழந்தைகளின் குதூகலம், சந்தோசம், கொண்டாட்டம், மகிழ்ச்சி, விளையாட்டுப் பொருட்களின் விற்பனையாளர்களின் வாழ்க்கை, நன்றாக இனிப்பு பதார்த்தங்கள் செய்யத்தெரிந்த, நமதூரைச் சார்ந்தவர்களின் திடீர் சந்தோஷ வருமானம், இளைஞர்களின் திடீர் கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் பஜ்ஜி வடை கடைகளால் வரும் வருமானம். சிறு சிறு வியாபாரிகளின் வியாபாரம். அதனால் அவரவர்களின் பலநாள் கனவான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு. இத்தனை தொண்ணூறு சதவிகித சந்தோஷமான விஷயங்கள் நடக்கும்போது, அதில்பத்து சதவிகிதசில தீய விஷயங்கள் நடப்பதை பெரிது படுத்தத்தான் வேண்டுமா? அப்படி அடுத்தவங்க வருமானத்திலேயும் சந்தொஷத்திலேயும் உங்களுக்கு என்ன அவ்வளவு காண்டோ தெரியவில்லை.

நீங்கள் மட்டும் தொலைக்காட்சியை சரிகாணுவீர்கள். நாங்கள் கந்தூரியை மேற்சொன்ன விஷயங்களுக்காக சரி காணக்கூடாதா?

"நாம் ஒரு பாவம் செய்தால் நூறு பாவங்கள் நம்மை பின் தொடரும்" என்பது பொதுவானக் கருத்தே!
அதேபோல்
"ஒரு நன்மையை நாம் ஏவினால் பல நன்மைகளை வல்ல இறைவனிடம் இருந்து நாம் பெறலாம்" என்பதும் உண்மையான கருத்தே!

மல்லிப்பட்டினம் ஹந்தூரி விழாவின் புகைப்படமோ, வீடியோ காட்சிகளை தங்களது இணையத்தளத்தில் பதிவு செய்வதாலோ / நடந்த விசயத்தை மூடி மறைப்பதாலோ ஒரு நன்மையையும் இல்லை. ஆனால் பாவங்கள் அனைவரையும் சாரும், அல்லாஹ்வுடைய கோபம் மல்லிப்பட்டினத்தின் மீது இறங்கும்! தாங்கள் செய்த சிறிய நன்மைகள்கூட அழிந்துவிடும் என்பது உண்மையே! ஆகவே தவறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொல்லுங்கள். இன்ஷா அல்லாஹ்!

யா அல்லாஹ்! சைத்தானின் தூண்டுதலில் வாழும் மல்லிப்பட்டின மக்களையும், உலக மக்கள் அனைவரையும் தவறுகளிலிருந்து பாதுகாத்து நேர்வழிப் படுத்துவாயாக ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

தர்ஹா வழிபாடு அல்லாஹ்விற்கு இனைவைப்பதற்கு சமம்! ஆகவே இஸ்லாமிய மார்க்கத்தில் தர்ஹா வழிபாடு கூடாது என்பது வல்ல இறைவன் அல்லாஹ்வினால் தடுக்கப்பட்டது என்பது நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் அதன்படி உலகில் மக்கள் வாழ்கிறார்கள் என்றால் இல்லை என்பது வெற்றுப்பதிலாக இருக்கிறது. இறைவனின் வேதத்தையும், நபிமொழி ஹதீசையும் மார்க்க அறிஞர்கள், உலாமாக்கள் அனைவரும் சரிவர மக்களுக்கு போதிக்காததினால் இன்று தர்ஹா வழிபாடு தழைத்தோங்கி நிற்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.

இஸ்லாமிய மார்க்கம் தடுத்ததில் ஒன்றான தர்ஹா வழிபாடு, ஹந்தூரி விழாவை மல்லிப்பட்டினத்தில் நாம் ஆடம்பரமாக செய்துவிட்டு அதில் பலர் பிழைப்பு நடத்தி லாபம் சம்பாதித்து இருக்கிறார்கள் அதனால் அது நன்மையே என்று கூறுவது எவ்விதத்தில் நியாயம். அப்படியென்றால் அல்லாஹ் தடுத்ததை நியாயப்படுத்திக்கூருவது போல் இருக்கிறது! அஸ்தஹ்பிருல்லாஹ்! இஸ்லாத்தில் வட்டி தொழில் தடுக்கப்பட்டதே! வட்டி வாங்குவதும், கொடுப்பதும் தவறே! அதற்கு மிகப்பெரிய தண்டனை வழங்கப்படும் என்று குரான் வசனமும், நபிமொழி ஹதீசும் கூறுகிறது என்பதை நாம் நன்கு அறிவோம். ஒருவர் வட்டித்தொழில் செய்கிறார் அவரிடம் மற்றொருவர் தனது பிரச்னையை தீர்ப்பதற்காக வட்டிமூலம் கடன்வாங்கினால் அது ஏற்றுக்கொள்ளப்படுமா? அதனால் வட்டிக்கு கடன்வாங்கியவர் பல லாபம் அடைந்ததினால் அது நன்மையான வருமானம் ஆகுமா? மொத்தத்தில் தவறுகள் மூலம் பெறப்படும் லாபம் அனைத்தும் நன்மையானது அல்ல என்பது உண்மை. தங்களுக்கு தக்க ஆதாரங்கள் வேண்டுமென்றால் புகாரி, முஸ்லிம், தாவூத், திர்மிதி போன்ற ஹதீசுகளில் தேடிப்பாருங்கள். இன்ஷா அல்லாஹ். ஆகவே ஹந்தூரி விழா நடத்துவதும் தவறே, அதற்காக கடைகள் போட்டு லாபம் சம்பாதிப்பதும் தவறே, காரணம் ஒருத்தரை ஊக்குவிப்பதாக இருக்கிறது ஹந்தூரிக்கு கடைகள் போடுவது. என்பதை உணர்ந்து கொல்லுங்கள்.

சீர்த்திருத்தம் என்று கூறிவிட்டு நாம் இன்னும் சீர்கெட்டு கொண்டியிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது வருத்தமாகத்தானிருக்கிறது. அனாச்சாரங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு அதன் கமிட்டியில் உறுதுணையாக செயல்பட்டது எவ்விதத்தில் நியாயம் அருமை நண்பர் நிஜாம் அவர்களே! இன்று சீர்த்திருத்தம் என்று கூறுபவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி வாழ்கிறார்களா? என்று யோசித்தால் குழப்பமான பதில்கள்தான் வருகிறது. ஆனால் அனைவரின் உள்ளங்களை அல்லாஹ் நன்கு அறிவான். இன்ஷா அல்லாஹ்.

நாம் ஊரை குறை சொல்வதைவிட நாம் ஒவ்வொருத்தரும் நமது வீட்டில் உள்ள ஆண்கள்/பெண்கள் முதல் குழந்தைகள்/பெரியவர்கள் வரை போன்றோர்களுக்கு நாம் சரியான முறையில் தாஃவா செய்தால் இன்று தர்ஹாவிற்கு பெண்கள் செல்லமாட்டார்கள். வீட்டில் ஒளிப்பரப்படும் டிவி (தொலைக்காட்சிப் பெட்டியில்) அனாச்சாரங்கள் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களை காணமாட்டார்கள் என்பது உண்மையே. தொலைகாட்சி என்பது உலகில் நடக்கும் நன்மைகள், தீமைகளை மார்க்கம் அனுமதிக்கும் முறையில் காண்பதற்கு தவிர அதில் ஒளிப்பரப்பபடும் தவறுகளை தூண்டக்கூடிய நிகழ்வுகள், அனாச்சாரங்கள் போன்றவற்றை காண்பதற்கு அல்ல! ஆனால் நம்மில் பலர் வெளியில் தாஃவா பணி செய்துவிட்டு வீட்டில் எவ்வித கட்டுப்பாடுகள் இல்லாமல் வாழ்வது எவ்விதத்தில் நியாயம்.

ஆகவே! தயவுசெய்து அல்லாஹ் தடுத்ததை நாமும் நமது வாழ்வில் தடுத்துக் கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு உலக இன்பத்திற்காக நாம் பாவங்களை செய்துக்கொண்டு வாழ்ந்தால் அந்த வாழ்க்கை நிறைவாக இருக்காது, நாளை மன்னரையிலும், மறுமையிலும் அதற்குரிய தண்டனைகளை பெற்றே ஆகவேண்டும் என்பது மெய்யே!

இன்ஷா அல்லாஹ்! தீமையை தடுத்து பல நன்மைகளை ஏவி அல்லாஹ்வும் உதவியால் சுகமாக வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். தயவுசெய்து தவறை மறைத்துவிட்டு அதை நியாயபடுத்த நினைக்கவேண்டாம். அப்படி செய்வதினால் தவறு சரியாகி விடாது! அதேபோல் உண்மைகளை எப்படி பொய்களால் மறைத்தாலும் அல்லாஹ்வின் உதவியால் உண்மைகள் வெளிவந்துவிடும் என்பது உண்மை. ஆகவே தயவுசெய்து தவறை தவறு என்று கூறி தடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நாம் அனைவரும் ஓன்றுபடுவோம். இன்ஷா அல்லாஹ்.

கந்தூரி வேண்டுமா வேண்டாமா என்பதல்ல பிரச்சினை. தற்கா வலாகத்தில் நடப்பதுதான் பிரச்சினை.
பட்டுக்கோட்டைக்கு பொருள்காட்சி பார்க்கலாம் . ,மனோரா , மெரீனா பீச்சில் கடல்அலையில் பல நூறு அந்நிய ஆடவன் முன்னிலையில் கால்நனைக்கலாம் ,யூடுபிலும் செல்போனிலும் பலான காட்சிகள் பார்க்கலாம் , சூப்பர் மேலோடிஸ் சாங் கேட்கலாம்.லிப்ஸ்டிக் ,பவுடர்,வாசனை திரவியங்கள் பூசிக்கொண்டு கல்யாண சுப காரியங்களுக்கு பெண்கள் செல்லலாம்,
குற்றாலத்தில் ஆண்கள் கண்கள் , கேமரா கண்கள் பார்க்க குளிக்கலாம்,தொழுகையை நேரம் தவறி தொழலாம் .
தர்கா என்ற பெயருக்கு பதிலாக வேறு ஒரு இங்கிலீஷ் பெயர் வைத்தால் நிச்சயமாக நீங்களே இந்த ஊர்காரர்கள் உறவுக்காரர்கள் கூடும் விழாவை முன்னின்று நடத்துவீர்கள்.
தர்காவை எதிர்ப்பதும் ,ஆளிம்களை கேலி செய்வதும் ஒரு பேஷன் ஆகி விட்டது.எல்லாருடைய வீட்டிலும் மானாட மயிலாட ,கூத்துக்கள் கும்மாளங்கள் ,படுக்கை அறையில் கேட்கும் முனகல் சத்தத்தை பத்துவயது சிறுவன் பாடும் பாட்டுக்கு பாட்டு போட்டியை நடுஹாலில் குடும்பத்தோடு பார்த்து வெக்கமின்றி ரசிக்கலாம் ,பொண்டாட்டியோட தங்கச்சியை வப்பாட்டியா வைக்கிறது எப்படின்னு கத்துகுடுக்குற தொடர்கள்,நாடகங்களகுடும்பத்தோட கண்கொட்டாம பாக்கலாம்.


இதுலஎல்லாம் போவாத .......
நடத்துங்க நடத்துங்க தொவ்கீது பேஷன் ஷோ

நெத்திலி நண்பரே!

நாம் அனைவரும் சத்தியத்தின்படியே வாழவேண்டும். அதைவிட்டுவிட்டு விதாண்டாவாதம் பேசி வாழ்வதினால் நாம் பல நன்மைகளை இழந்து பெரும்பாவங்களை சம்பாதித்தவராக ஆகிவிடுவோம்.

இஸ்லாம் எதை தடுத்திருக்கிறதோ அதை நாமும் தடுத்து வாழவேண்டும்!
இஸ்லாம் எதை அனுமதித்து இருக்கிறதோ அதை மனப்பூர்வமாக ஏற்று வாழவேண்டும் என்பதே நியதி!

தர்ஹா வளாகமாக இருக்கட்டும், தவ்ஹீது பேசுபவர்களின் இடமாக இருக்கட்டும், முஸ்லிம் மக்கள் ஓன்று சேருமிடமாக இருக்கட்டும் ஆனால் அங்கெல்லாம் மார்க்கம் அனுமதித்தது மட்டும் நடந்தால் அது நன்மையானதே! ஆனால் மார்க்கம் தடுத்ததை மனப்பூர்வமாக விரும்பி செய்தால் அதற்குரிய தண்டனைகளை ஒவ்வொருத்தரும் மறுமையிலே அல்லஹ்விடம் அனுபவித்தாக வேண்டும் என்பதில் மாற்றமில்லை.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை யார் தவறு செய்தாலும் அது தவறே! இஸ்லாத்தை பொறுத்தாரை யார் பெரியவர், தாழ்ந்தவர் என்கிற பேதமில்லை ஆனால் யார் உண்மையாக வாழ்ந்து மறுமைக்காக பல நன்மைகளை சம்பாதித்து குவித்து வைத்திருக்கிறார்களே அவர்களே வாழ்வில் உயர்ந்தவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

அதாவது யார் யார் என்னென்ன நன்மைகள், தீமைகள் செய்கிறார்களோ அதற்குரிய தண்டனையை நாளை மஹசர் மைதானத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் செய்த நன்மைக்கு, தீமைக்கு நான் பொருப்புத்தாரியாக முடியாது. நீங்கள்தான் அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நெத்திலி நண்பரே! (தொடர் 1)

அதுபோல மார்க்கம் அனுமதிக்காக விசயத்தில் இவ்வுலக இன்ப வாழ்க்கைக்கு யார் அதிகமாக அக்கரைக்காட்டுகிரார்களோ அவர்கள் நஷ்டவாளியாகவே நாளை மறுமையிலே எழுப்படுவார்கள் என்பது உண்மை.
ஆகவே யார்யார் பட்டுக்கொட்டையிலுள்ள சினிமா கொட்டகைக்கு படம் பார்க்கவோ, பொருட்காட்சி பார்க்கவோ, பர்லான தொழுகையை சரியான நேரத்தில் தொழாமல் காலம் தாழ்த்தி தொழுதாலோ, தங்களது வீட்டிலே டிவியில் ஒளிப்பரப்படும் ஆபாசம் நிறைந்த / அனாச்சாரம் மிகுந்த கட்சிகளை காட்சிகளை கண்டு கழித்தலில் எது நன்மையோ அதற்குரிய பலனை அனுபவித்துக் கொள்வார்கள் ஆனால் அத்தனையும் தவறு என்று மார்க்கத்தின் அடிப்படையில் கூறிவிட்டால் அதற்குரிய தண்டனையை அவர் அவர்களே அனுபவித்துக் கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் தடுப்பது நாம் அனைவருடைய கடமை. கேட்பதும், கேட்காமல் நடந்து கொள்வதும் அவர்களின் விருப்பம். நாளை அவருடைய பாவச்சுமையை நாம் சுமக்க மாட்டோம் என்று இறைவனின் திருக்குர்ஆன் வசனம் கூறுகிறது.

ஆகவே எது தவறோ அத்தனையும் தவறு! எது நன்மையாக இருக்கிறதோ அதை உண்மையாக செய்தால் தக்க பலனை நீங்கள் சுவைக்கலாம். இன்ஷா அல்லாஹ்..!

தயவுசெய்து நாம் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளவேண்டாம். இஸ்லாம் தவ்ஹீத் என்று கூறும் நபர்களுக்கு மட்டுமல்ல. அவர்களுக்காக நீங்கள் தனதல்து நேர்மைகளை இழந்து விடவேண்டாம். இன்ஷா அல்லாஹ்..!

மார்க்கம் யாருடையதுமில்லை. அல்லாஹ்வுடையது. பொதுவானது! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வழியை நாடியிருக்கிறான் ஆனால் எது நன்மை, எது தீமை என்பதை அல்லாஹ்வின் திருத்தூதர் அழகாக எடுத்துக்கொறி வாழ்ந்து காண்பித்திருக்கிறார் என்பதை பல ஹதீஸின் மூலம் படித்து அறிந்து வாழ முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்.

நன்மை, தீமைகளை தீர்மானிப்பவன் அல்லாஹ் ஒருவனே!
தவ்ஹீத் என்று மேடையில் பேசித்திரியும் அன்பர்கள் அல்ல! என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்.

தயவு செய்து வேண்டாம்.

no need photos and videos.it may spread the wrong message.

Great people are writing articles instead of comments, anyhow my concern is

We did not expect such question from the moderator as he himself doesn't like or he might have changed his ideology after having this Jama'ath treasure position and becomes .........

If acquiring the darha land was real motto for celebrating kandoori, drinking, prostitution etc, what is next move to grab the land legally

If they are trying to fight legally what is border, will VV residence existing there included ?
Where are they trying to lay road? Out side or inside darha land?
What is the need of having road into darha land? To validate individual's land price into high, what is the commission darha committe and Jama'ath is getting from the land owners

நிஜாமின் வலைத்தளத்தில் ஊரில் நடந்த கந்தூரி விழாவின் வீடியோ காட்சிகளை வெளியிடுவது தவறு? ஆனால் ஊரில் கந்தூரி நடத்தலாம்? அப்படித்தானே நண்பர்களே!

வீடியோவை இங்கு பதியவேண்டாம் என்று கூரும்நீங்கள் ஏன் தடுக்க முயற்சிக்கவில்லை?
அத்தவறு நடந்து எங்கோ? ஆனால் இதுபோன்ற தவறுகள் நடந்திருக்கிறது இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு இதுபோன்ற காட்சிகளை காண்பித்தால் அனைவரும் தடுக்க முன்வருவீர்கள் என்பதை உணர்ந்துவதற்கு வீடியோவை பதிந்திருக்கிறார்.

"
தாய்மொழியை புறம்தள்ளிவிட்டு ஆங்கிலத்தில் எழுதினால் அடுத்தவர்கள் அறிவில் குறைந்தவரா?
முதலில் எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருக்க கற்றுக்கொள்ளுங்கள். "

புரியாத மக்களுக்கு நிகழ்ந்த காட்சிகளை காண்பித்தால் அதனின் அசிங்கம் உணர்ந்து திருந்துவதற்கு முயற்சி செய்வார்கள்.

இன்ஷா அல்லாஹ்..!

முதலில் ஊரில் உள்ள மக்களை / குடும்பத்தை / ஊர் ஜமாத்தை / ஊர் நிர்வாகத்தில் மாற்ற முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்.

Mr. Inaiyavan
I would like to bring ur kind notice that I am using gadget which doesn't have Tamil font and I don't know Tamil typing as well,

At the inception I strongly condemn this stupidity and I am not against Nijam Bhai, but my question is being a jamaath member what has he done to stop this kandoori, where as there are two small masjids with insufficient facilities, what steps jamaath has taken to improve the facilities there, if Nijam Bhai is not there in jamaath I won't be asking this from the existing jamaath bcas they dont have any qualification as Almighty recited in his Quran to manage a masjid

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோ. உமர் புலவர்!

உங்களின் வாதம் நியாயமானதே! ஆதங்கமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்! மாஷா அல்லாஹ்!
இருந்தாலும் நான் மல்லிப்பட்டினம் கந்தூரி சம்பந்தமாக எனது கருத்தை ஏற்கனேவே பதிந்துள்ளேன். அந்த பதிவை நீங்கள் பார்த்தீர்களேயானால் கண்டிப்பாக உணர்ந்து கொள்வீர்கள்.

அந்த பதிவு பதிந்த இடம் சகோ. சேக்தாவூத் அவர்களின் மகளுக்கு திருமணம் செய்துவைக்க நிதிக்கேட்டு நண்பர். நிஜாம் ஒருபதிவை பதிந்துள்ளார். அந்த பதிவில் கந்தூரி சம்பந்தமாக எனது கருத்தை எழுதியிருந்தேன். தயவுசெய்து நீங்கள் அதைப் படித்துவிட்டு பிறகு உங்களின் கருத்துக்களை கூறுங்கள்! இன்ஷா அல்லாஹ்!

தற்போது உங்களின் ஊர் சூழ்நிலையைப் பார்த்தால் நான் பெரியவனா? நீங்கள் பெரியவா? என்கிற அற்பத்தனமான போட்டியும், ஊரின் பள்ளிக்கு வரும் வருமானத்தை கையகப் படுத்தவேண்டும் என்கிற எண்ணமும் தவிர வேறே எந்த நல்ல நோக்கமும் இல்லை என்பது தற்போது தங்களுக்கிடையே நடைபெறும் விவாதம் நன்றாக தெரிகிறது.

எனவே ஊரில் ஒற்றுமைக்கு போராடுங்கள்...இன்ஷா அல்லாஹ் நலமாக வாழலாம்..அனைவரும்!
நீங்கள் பிரிவினையோடு வாழ முயற்சித்தால் அடுத்தவர்கள் தங்களை ஆழ நேரிடும்.! கவனம் தேவை!

No need Corruption......!

quote
"From Mr. umar Pulavar
"At the inception I strongly condemn this stupidity "
unquote

First of all, You have to understand how to behave others.....if anything to said you. Otherwise dont use unnecessary word against other people's. This is not good mannerisam. Insha Allah, Please try to change your conversation good way.

Nobody like Kanthoori against Islam. So, Everybody decide to stop unnecessary things in your place.

Best of luck.....! insha allah...!

Nothing wrong in my word "stupidity" as kandoori is certainly a stupid, unnecessary practice which Islam doesn't preach, surely a bid'aa

I don't know how do you understand my write ups, however I am sorry if my write ups hurts you

I also a anticipate an explanation from Nijam Bhai being Jamaath treasurer, what is his plan to uplift the community in various aspects like education,finance, basic amenities, health care etc